யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ள 2 மரணங்கள்..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு பரிசோதனையின் போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) என்வரே இவ்வாறு உயிரிழந்த இளைஞன் ஆவார்.

அதேவேளை முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவர் டெங்கு தீவிரமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.