Sir என கூப்பிட சொல்லி சாவகச்சேரி வைத்தியரை திட்டிய JMO பிரணவன் : கசிந்த தொலைபேசி உரையாடல்

சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலையின் வைத்தியர் JMO பிரணவனுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து பேசிய போது பிரணவன் தன்னை Sir என அழைக்க சொல்லிய சம்பவம் ஒன்று தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஜீவன் என்ற நபர் ஒருவர் வெளியிட்ட பதிவில்,

சுவிஸ்சர்லாந்தில் எனது வைத்தியர்களை பெயர் சொல்லியே அழைப்பேன். ஆரம்பத்தில் டொக்டர் என்பதாக தொடங்கி, காலப் போக்கில் பெயர் சொல்லியே அழை என சொல்வார்கள்.

பொதுவாக ஒன்றாக வேலை செய்பவர்கள் (Staff) பெயர் சொல்லியே அழைப்பார்கள். இதனால் மரியாதை இல்லாமல் போவதில்லை.

அவர்களுக்குள் உள்ள நெருக்கமே அதனால் வெளிப்படும். அதை சொல்லி பெருமை கொள்வார்கள்.

பிரணவன் எனும் நபர் தன்னை சேர் என அழைக்கச் சொல்லி தன் சக ஊழியர்களிடம் கத்துகிறார்.

மரியாதை கேட்டு கிடைப்பதில்லை. அது தானாக வர வேண்டும். தனது ஊழியர் ஒருவரிடம் இப்படி கத்துறவன், வேலை செய்வோர், நோயாளிகளிடம் எப்படி கத்துவான்?

Sir என்ற சொல்லுக்கு Slave I remain என்று ஒரு அர்த்தம் பகிடியாக சொல்வார்கள். இந்த JMO பிரணவன் கத்தியதை பார்த்தால், அவன் அடுத்தவர்களை அடிமை என நினைக்கிறான் போல உள்ளது.

குறித்த தகவலை ஜீவன் என்ற நபர் பதிவிட்டுள்ளார்.