யாழ் போதனா வைத்தியசாலையில் அரங்கேறிய ஈவிரக்கமற்ற செயல்


யாழ் போதனா வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிபரை அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் சேர்ந்து ஈவிரக்கமின்றி தாக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று(14) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பாதுகாப்பு ஊழியரின் காடைத்தனத்தை வீடியோ எடுத்த மருத்துவ பீட மாணவி மீதும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான நபர் மதுபோதையில் இருந்ததாகவும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த சம்பவம் தொடர்பிலும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் அடாவடியான செயலுக்கும் சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பில் வைத்தியசாலை தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.