யாழ். போதனா வைத்திசாலையில் கடந்த ஆண்டு 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன என்று வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்திசாலையில் கடந்த ஆண்டு 5 ஆயிரத்து 510 குழந்தைகள் பிறந்துள்ளன.
அவற்றில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 1052 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 238 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.