பாலஸ்தீனியர்கள் சென்ற கார் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நப்லஸ் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மூன்று பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளனர்.இஸ்ரேலியப் படைகள் நேரடியாகச் சுட்டதன் விளைவாக மூன்று குடிமக்கள் வீரமரணம் அடைந்தனர் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.இருப்பினும் துப்பாக்கிச் சூடு காரணமாக உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் காணப்படுவத மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் இஸ்ரேலிய அரசாங்கமும் பிரதமரும் இந்த குற்றத்திற்கு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.