காசாவில் கடும் மோதல்! 20 பேர் பலி : மக்களுக்கு அவசர அறிவிப்பு

காசாவின் வடக்குப் பகுதியில் இஸ்ரேலியப் துருப்புகள் இன்று (30) கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இதுவரை 20 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் படைகள் கவச வாகனங்களுடன் அந்தப் பகுதிக்குள் நுழைந்து தரைவழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

காசாவின் ஷிஃபா (Shifa), ஆல்-கூட்ஸ் (Al-Quds) மருத்துவமனைகளுக்கு வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காசாவின் வடக்கு பகுதியில், கடுமையான மோதல்கள் நடந்து வரும் நிலையில், காசா மக்கள் அவசரமாக வடக்கில் இருந்து தெற்கை நோக்கி உடனே செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டது.

இதேவேளை, காசாவில் இஸ்ரேல் படைகளுடன் நடந்த மோதலில் 20 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, காசாவில் 600 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.