மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? சீனா, சிங்கப்பூரில் பரபரப்பு..!


சிங்கப்பூர் மற்றும் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கொரோனா வைரஸ் இலங்கை, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலகம் முழுவதும் மிகப்பெரிய உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் பதிவானது.

 
அதன் பின்னர், கொரோனா வைரஸ{க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டது கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தினர்.
 
இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுவதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் சீனாவின் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இரு நாடுகளிலும் மாஸ்க் அணிதல் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


இருப்பினும், இது கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தானா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும், உலக சுகாதார மையம் இது குறித்து தீவிரமாக கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.