உக்கிரமடையும் ஈரான் - இஸ்ரேல் சீற்றம்! பதற்றத்தில் தடுமாறும் உலகம்

வரலாற்றில் 1948ஆம் ஆண்டில் இருந்து மறைமுகமாக மோதிக் கொண்ட ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு எதிரிகளும் இப்பொழுது நேரடியாக மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளன என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஈரான் தற்போது நடத்திய தாக்குதலில் தனது முழு பலத்தைக் காட்டியதா அல்லது ஏமாற்றியதா என்ற ஒரு சிறு பிரச்சினை இங்கு உள்ளது என்றும் பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.