தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானிய டைக்குவாண்டோ விளையாட்டின் முக்கிய மூன்று வீரர்கள் கொல்லப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களில் ஈரானிய டைக்குவாண்டோவின் எதிர்கால நம்பிக்கை என கருதப்பட்ட இளம் நட்சத்திர வீரர் அமீர் அலி அமினியும் அடங்குவார் என கூறப்படுகிக்னது.
இந்த துயரச் சம்பவம் ஈரானிய விளையாட்டு சமூகத்தை, குறிப்பாக தற்காப்பு கலைகள் மற்றும் டைக்குவாண்டோ விiளாயாட்டு துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அமீர் அலி அமினி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஈரானிய டைக்குவாண்டோ விளையாட்டு துறையில் பெரும் சாதனைகளைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள இளம் வீரர்.
அவரது மரணம் ஈரானிய விளையாட்டு உலகிற்கு ஒரு மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
அமீனியின் மரணத்திற்கான சரியான இடம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து டைக்குவாண்டோ கூட்டமைப்பு எந்த விபரங்களையும் வெளியிடவில்லை.
இருப்பினும், ஈரானிய ஊடக அறிக்கைகள், ஞாயிற்றுக்கிழமை இரவு தெஹ்ரானில் பல பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பல பொதுமக்களில் அமினியும் ஒருவர் என்று தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் வடகிழக்கு தெஹ்ரானில் உள்ள ஷாஹித் சாம்ரான் நோபோனியாட் குடியிருப்பு வளாகத்தில் நேற்று கொல்லப்பட்ட 60 பேரில் 29 குழந்தைகள் அடங்குவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.