சர்வதேச விமான சேவைக்கு அனுமதி!

சர்வதேச விமான சேவைக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் அனுமதியளிக்கப்படும் என  விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் விமான சேவை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களில் மாத்திரம் சர்வதேச விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது.தற்போது நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு 4 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் வழக்கமான விமான போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.