இந்தியாவில் மேலும் பலருக்கு தொற்று உறுதி!

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 282000ற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 79 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 55 இலட்சத்து 83 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதன்படி நேற்று ஒரேநாளில் 188157 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரம் 183000ற்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.மேலும் நேற்று ஒரேநாளில் 442 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 486000ஐ  கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.