இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது, கடந்த (19)செவ்வாய்க்கிழமை ஆரம்பமானதை தொடர்ந்து இன்றும்(22) தொடர்கிறது.
இவ்வாறு போராட்டத்தின் ஆரம்பித்த கடற்றொழிலாளர்கள் தமது பொறுமை இழந்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துவங்கி தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதுடன் இந்திய துணை தூதரகத்திற்குள் நுழைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையினர் கடற்றொழிலார்களை சுமூகமான நிலைக்குள் கொண்டுவர முயன்றும் கடற்றொழிலார்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவல்துறையினர் கை விலங்கினை காட்டி கடற்றொழிலார்களை அச்சுறுத்தும் விதத்தில் மிரட்டி வருகின்றனர்.
தொடர்ச்சியாக தமது வளங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் இதனை தடுத்து நிறுத்துமாறு கோரி கடற்றொழிலார்கள் இவ்வாறு தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.