உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்திற்கு இடமாற்றம்!

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்து நாட்டிற்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைனில் பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவதால் அந்நாட்டில் இருந்து தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம் செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதேநேரம் உக்ரைனில் நிலவும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதுஇதேவேளை  ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனின் கீவ், லிவிவ், கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.