அமெரிக்கா, இரும்பு மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி வரியை 25வீதத்திலிருந்து 50வீதமாகக உயர்த்தியதற்கு பதிலடியாக, இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க முடிவு செய்துள்ளது.
இந்த முடிவு, இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்றுவரும் “மினி வர்த்தக ஒப்பந்த” பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், முழுமையான வர்த்தக ஒப்பந்தம், செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் கையெழுத்தாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவின் பதிலடி நடவடிக்கையால், இந்திய மதிப்பில் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான அமெரிக்க பொருட்கள் பாதிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தியா, உலக வர்த்தக அமைப்பிடம் குறித்த தீர்மானத்தை அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னிணியில், இந்தியாவின் இந்த முடிவானது, உலக வர்த்தகத்தில் மாற்றத்தை உருவாக்கும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.