ஓமானை அண்மித்த கடற்பகுதியில் 16 பேருடன் மூழ்கியுள்ள மசகு எண்ணெய்க் கப்பலை தேடும் முயற்சிகளில் இந்திய கடற்படையும் இணைந்துள்ளது.
கொமொரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஓமானின் ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் கடந்த திங்கட்கிழமையன்று கடலில் மூழ்கியது.
இந்த சம்பவம் தொடர்பில் ஓமானின் கடல்சார் பாதுகாப்பு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் அந்தக் கப்பலின் பணிக்குழாமில் 13 இந்தியர்களும், 3 இலங்கையர்களும் இருந்ததாகத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கப்பலைக் கண்டுபிடிப்பதற்காகவும், காணாமல்போயுள்ள பணிக்குழாமினரை மீட்பதற்காகவும் கப்பல் ஒன்றையும் விமானம் ஒன்றையும் இந்திய கடற்படை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.