உக்ரைன் அதிபருடன் மோடி பேச்சுவார்த்தை!

உக்ரைன்- ரஷ்யா இடையில் 12 நாட்களாக  போர் சூழல் நீடித்து வருகின்ற நிலையில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.போர் சூழல் காரணமாக இதுவரை 15 இலட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பின் ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி ருவிட்டரில்  தெரிவித்துள்ளாா்.அதேநேரம் போரை நிறைவுக்கு கொண்டுவர ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.இந்த சூழலில் இந்தியா உக்ரைன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.