900 மில்லியன் டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ள இந்தியா!

இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா இலங்கைக்கு 900 மில்லியன் டொலரை வழங்கியுள்ளது.இந்த விடயம் தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.உயர்ஸ்தானிகர் மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்து இந்தியாவின் ஆதரவை இலங்கைக்கு தெரிவித்ததாக உயர்ஸ்தானிகர் ருவீட் செய்துள்ளார்.அதற்கமைய, இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றம் உட்பட 900 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை நீடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.