இந்தியாவின் ஒமிக்ரோன் நிலமை- புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள மாநில அரசுகள்!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 900 கடந்துள்ள நிலையில் மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.இதன்படி 8 மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளன. கேரளாவில் இன்று முதல் எதிர்வரும் 2ம் திகதிவரை கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை அரசியல், சமூக மற்றும் மதக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த காலக்கட்டத்தில் பயணத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் ஆபத்தான நாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.