இந்தியாவில் முதலாவது ஒமிக்ரோன் உயிரிழப்பு பதிவு!

இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றினால் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பரிசோதனையில் அவருக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளதுடன் அவர் நாற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதில் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது.அதில் 900 பேர் குணமடைந்துள்ளதுடன், பலர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.