இந்தியாவில் அதிகரித்து செல்லும் கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை!

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 241976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 63 இலட்சத்தைக் கடந்துள்ளது.மேலும் நேற்று மாத்திரம் 66000ற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 113000ஐ  கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அதேநேரம் நேற்று மாத்திரம் 85 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 484000ஐ கடந்துள்ளது.