இலங்கையிலிருந்து புறப்படும் விமானங்கள் தொடர்பில் முக்கிய தகவல்


இலங்கையிலிருந்து மத்திய கிழக்கிற்கு புறப்படும் விமானங்களில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் இருந்து, மத்திய கிழக்கில் உள்ள விமான நிலையங்களுக்கு புறப்பட வேண்டிய பல விமானங்கள் தாமதமாகியுள்ளன.

விமான நிலைய தரப்புகள் இதனை தெரிவித்துள்ளன.

முன்னதாக, கட்டாரில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூட முடிவு செய்தன.

 எனினும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் எந்த விமானங்களும் இரத்து செய்யப்படவில்லை என்றும் விமான நிலைய தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கட்டார் மற்றும் குவைட் நோக்கி செல்லும் விமான பயணங்கள் தாமதமானாலும், இடையூறுகளுக்கு மத்தியிலும் வழமை போல் மேற்கொள்ளப்படும் என பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேநேரம் கட்டார் தனது வான்பரப்பை மீண்டும் திறந்துவிட்டதாக அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்பு நிலைமை தற்போது சீரடைந்துள்ளதாக கட்டார் அரசு தெரிவித்துள்ளது.

குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் தங்கள் வான்பரப்புகளை மீண்டும் திறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.