அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பம் கோரல் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலத்திற்கு குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முதலாம் கட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திப்பதன் ஊடாக, இரண்டாம் கட்டத்தை நிறைவுறுத்தும் போது, 2,400,000 பேருக்கு அஸ்வெசும நலன்புரி திட்டத்தை வழங்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், எந்தவொரு தரப்பினருக்கும் இதற்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் செலுத்தப்படவுள்ள நிலையில், அதற்காக 205 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.