இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் சனிக்கிழமை 2593 பேர் புதிதாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 இலட்சத்தைக் கடந்துள்ளது.இவர்களில் 4 கோடியே 25 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 44 பேர் நேற்று மாத்திரம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.