ஜனாதிபதியுடன் தனிப்பட்ட தொடர்பு கொண்டுள்ளேன் - சரத் பொன்சேகா தெரிவிப்பு..!

சரத் பொன்சேகா இரவு நேரங்களில் டயனா கமகேவின் வீட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும் அவ்வாறு ஏற்படும் பிரச்சினைகளுக்கு கட்சிக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தான் தனிப்பட்ட தொடர்புகளை கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சரத் பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நான் வேறு விதமான தொடர்புகளை கொண்டுள்ளேன். என்னை அரசியலில் அறிமுகப்படுத்தியது ரணில் விக்ரமசிங்க இதற்கமைய அவருடனான எனது உறவு அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.