யாழ். கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 25 வயது இளைஞன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
100 மில்லிகிராம் ஹெரோய்ன் போதை பொருளுடன் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 5 வருடங்களாக அடிமையான குறித்த இளைஞன் அதிலிருந்து மீண்டுவர முடியவில்லை என காவல்துறையினரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைகளின் போது, தான் ஐந்து வருடங்களாக போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளதாகவும், அதில் இருந்து தன்னால் மீண்டுவர முடியாதுள்ளதால் தொடர்ந்து போதை பொருளை நுகர்ந்து வருவதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.