தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை! மோடி சூளுரை |

தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை என்றும், தமிழ் பண்பாட்டை பற்றி பேசாத நாளே இல்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது ‛வணக்கம், எனது தமிழ் குடும்பமே, முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.' என தமிழில் கூறி பிரதமர் மோடி பேச்சை துவக்கினார்.

மேலும், இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடப்பதை பாக்கியமாக கருதுகிறேன். தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை.

உலகின் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழ் மொழியை புகழாமல் நான் இருந்ததில்லை.

எனக்கு பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் இருந்து தமிழ் பண்பாட்டை அறிகிறேன். தமிழ் பண்பாட்டை பற்றி பேசாத நாளே இல்லை.

தமிழ் பண்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்கின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.