இலங்கையில் ஹெலிகொப்டர் விபத்து : 6 பேர் பலி


இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பொலன்னறுவை, ஹிங்குரக்கொடையில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
 
இச்சம்பவத்தில் காயமடைந்து, பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது
 
மேலும் 6 பேர் தொடர்ந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.