ஈக்குவடோர் தலைநகரில் கனமழை- 11 பேர் பலி!

ஈக்குவடோர் தலைநகர் கீட்டோவில் பெய்த கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் பல கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உள்ளூர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளமை காரணமாக, நகரின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஈக்குவடோரைத் தாக்கிய மிகக் கடுமையான வெள்ளம் இதுவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.