மலேசியாவில் கனமழை-பலி எண்ணிக்கை உயர்வு!

மலேசியாவில் வரலாறு காணாத அளவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட அனர்தங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளதுகடந்த வெள்ளிக்கிழமை முதல் பெரிதுவரும் கனமழை காரணமாக பெனிசுலா மாகாணத்தின் பஹங், சிலங்கர் ஆகிய 2 நகரங்கள் மிகவும் மோசமான பாதிப்படைந்துள்ளது.கனமழை காரணமாக பல்வேறு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.தாழ்வான பகுதிகளில் இருந்த 50,000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மலேசியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.