மத்திய கொலம்பியாவில் கனமழை,நிலச்சரிவு-14 பேர் பலி!

மத்திய கொலம்பியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.செவ்வாயன்று ரிசரால்டா மாகாணத்தில் பல வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் இதில் காயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.பெருக்கெடுத்த ஆற்றுக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் மீட்பு பணிகளில் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக கொலம்பியாவின் பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.