தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் சாத்தியம்!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கையில் “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் நிலவும். அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைவாக 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும்”  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.