இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்



அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக அந்நிய செலாவணியை தற்போது மத்திய வங்கி வழங்குவதில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது வங்கி முறை மூலம் இதற்கான பணம் வழங்கப்படுகின்றதென அவர் கூறுகிறார்.

நேர்காணல் ஒன்றின் போதே இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தற்போதைய நிலைமையில், அத்தியாவசியப் பொருட்களுக்கான அந்நியச் செலாவணிக்கு தட்டுப்பாடு இல்லை.

எண்ணெய், எரிவாயு, நிலக்கரி, அத்தியாவசிய மருந்துகள் என அனைத்துப் பொருட்களுக்கும் தேவையான அந்நிய செலாவணியை தற்போது மத்திய வங்கி வழங்குவதில்லை. தற்போது வங்கி முறை மூலம் வழங்கப்படுகின்றது.

அதன் வைப்புத் தொகை இப்போது சுமார் 600 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளார்.