இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..! ஒரே நேரத்தில் வங்கியில் வைப்பிலிடப்படும் இரு மாதங்களுக்கான பணம்!


நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளவர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு இம்மாதத்தின் இறுதி பகுதியில் இருந்து வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக தற்போது முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பரிசீலனைகளை தொடர்ந்து பெயர் பட்டியலில் மாற்றம் ஏற்படும் போது புதிதாக உள்வாங்கப்படும் பயனாளர்களுக்கான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத தவணை கொடுப்பனவு ஒரே நேரத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதன்போது இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

அரச நலன்புரித் திட்ட கொள்கைக்கு அமைய கிடைக்கப் பெற்ற 33 இலட்ச விண்ணப்பதாரிகளில் 70 சதவீத சமுர்த்தி பயனாளர் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக 22 இலட்சம் குடும்பங்களுக்கு குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்துக்கு அமைய நிவரணத் தொகை வழங்கப்படவுள்ளது. 

இந்த தொகை 16.8 இலட்சம் சமுர்த்தி பயனாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும்.

அத்துடன் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளர்கள், மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.