ஹமாஸிற்கு பேரிழப்பு: இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் முக்கிய தளபதி பலி

ஹமாஸின் முக்கிய படை தளபதியொருவர் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் தொடர் தாக்குதல் நடத்தினர், அதனை தொடர்ந்து இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து கடுமையான போரில் ஈடுபட்டு வருகிறது.

குறித்த போரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9000 ஐ கடந்துள்ளதோடு பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இஸ்ரேல் - ஹமாஸ் இன் போர் நிறுத்ததை உலக நாடுகள் வலியுறுத்தியுள்ள நிலையில் அமெரிக்கா அதனை முற்றாக மறுத்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் வசிக்க கூடிய ஜபாலியா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் ஊடுருவியிருப்பதாக தகவல்கிடைத்ததையடுத்து அங்கு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் மத்திய ஜபாலியா படை தளபதி இப்ராஹிம் பியாரி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.