பணயக் கைதிகளை கொல்லும் ஹமாஸ்

காஸா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் தம்மால் பிடித்து வைக்கப்பட்டிருந்த பணயக்கைதிகளை கொல்ல ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் ஹமாஸ் அமைப்பினரால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் இலங்கையர்களும் இருப்பதாகத் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.