பாடசாலை மாணவி வன்புணர்வு - சிகையலங்கார நிபுணர் சிக்கினார்

16 வயதுடைய பாடசாலை மாணவியை தன்னுடன் விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு புரிந்த சிகையலங்கார நிபுணர் கண்டி காவல்துறை பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

45 வயதான சந்தேக நபர் கண்டி தலவின்ன பிரதேசத்தில் சிகையலங்கார நிலையம் ஒன்றை நடத்தி வருபவர்.

அவர் கண்டி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தபடவுள்ளார்.

சந்தேகநபர் பாடசாலை மாணவிக்கு எதிராக அவதூறான வதந்திகளை பரப்பியதாகவும், அது தொடர்பில் அவரிடம் வினவிய போது, இது குறித்து நிதானமாக பேச தன்னுடன் வருமாறு கூறி, விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.