இந்திய தேர்தல் வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு - மணிப்பூரில் பதற்றம்


இந்தியாவின்  மணிப்பூர்  வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (19) காலை முதல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், வரிசையில் நின்ற வாக்களர்களிடையே வன்முறை ஏற்பட்டது.

இதில் தமன்போக்பி வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

எனினும், இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல்  நடவடிக்கையாக கருதப்படும் இந்திய பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

543 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று (19.4.2024) பொதுத் தேர்தல் (நுடநஉவழைn) நடைபெறுவதுடன் இரண்டரை மாதங்களுக்கு 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.


அத்துடன் ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் (ஐனெயைn நடநஉவழைn) ஆணையம் அறிவித்துள்ளது.


முதல் கட்ட தேர்தல் இன்று (19.4.2024) , 2ஆவது கட்டம் ஏப்ரல் 26ஆம் திகதியும், மூன்றாம் கட்டம் மே 7ஆம் திகதியும், நான்காம் கட்டம் மே 13ஆம் திகதியும், ஐந்தாம் கட்டம் மே 20ஆம் திகதியும், ஆறாம் கட்டம் மே 25ஆம் திகதியும், ஏழாவது கட்டம் ஜூன் முதலாம் ஆம் திகதியும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு (ஐnனைய) வலுவான தலைமையை வழங்கி வரும்நிலையில் மோடியின் பாஜக தங்களுக்கு நட்பான அரசியல் கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்துள்ளது.

இந்தப் பொதுத் தேர்தலில் மோடியின் பாஜக தனித்து 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனவும் ஒட்டுமொத்தமாக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என்றும் இந்திய அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.