இலங்கையில் தனியார்மயமாகும் அரச நிறுவனங்கள்..!

அரச நிறுவனங்களை, தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும்,“அரச நிறுவனங்கள் ஒரு சுமையாக மாறுவது ஒரு உண்மையாகும். இதனடிப்படையில் நாங்கள் தனியார்மயமாக்கலுக்கு நிபந்தனை ஆதரவை வழங்குகிறோம்.

ஆர்.பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்கவின் காலப்பகுதியில் 2001 முதல் 2004 வரை இருந்தது போன்று தனியார்மயம் மோசடியாக இருக்கக்கூடாது.

தனியார்மயமாக்கல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். சுரண்டலைத் தவிர்க்கும் வகையில் ஒழுங்குமுறை பொறிமுறை இருக்க வேண்டும்.

இது தேசிய பாதுகாப்பு மற்றும் அவசரநிலைக்கு அவசியமான நிறுவனங்களை பாதிக்கக்கூடாது.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் அரச துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.