கோட்டாபயவே நாடு சீரழிய காரணம்! ஒப்புக்கொண்ட ராஜபக்சக்களின் சகா


கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவு மிகத் தவறானது என ராஜபக்சக்களின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று (28.03.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்ரசிங்கவை நியமிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த முடிவு சரியானது என அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய ஜனாதிபதிப் பதவிக்கு ரணில் விக்ரசிங்கவை நியமித்த முடிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.