ஐபோன்களை அள்ளிச் சென்ற கும்பல் : அமெரிக்காவில் தொடரும் பதற்றம்


அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்க அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ளது.
 குறிப்பாக ஆப்பிள் ஸ்டோரை போராட்டக்காரர்கள் என்ற பெயரில் மர்ம நபர்கள் சூறையாடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆப்பிள் ஸ்டோரை உடைத்து பொருள்களை திருடி சென்றதாகவும், கட்டிடத்தின் மீது அமெரிக்க அரசுக்கு எதிரான சுவரொட்டிகளை வரைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
 
அடிடாஸ், மருந்தகம், மரிஜுவானா விற்பனை நிலையம் உட்பட பல இடங்களில் கொள்ளை நடந்துள்ளதாகவும், ஒரு நகைக்கடையும் சூறையாடப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

 
லொஸ் ஏஞ்சல்ஸில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ள நிலையில், இந்த வன்முறை தற்போது கொள்ளையாகவும் மாறி உள்ளதை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
 
தனியார், பொது சொத்துக்களை சூறையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அவர் 700 இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..