2 பெண்களை நிர்வாணமாக்கி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் : வெளியான அதிர்ச்சி வீடியோ, நபர் ஒருவர் சிக்கினார்

 

இந்தியாவின் மணிப்பூர் பகுதியில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை கடந்த மே மாதம் 4 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டதாகவும் இதன் போது குறித்தப் பெண்கள் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்;கப்பட்டதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தை தடுக்க சென்ற அந்த பெண்களின் தந்தை, சகோதரர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்துள்ளனர்.

 இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் கடந்த பிறகே வெளி உலகிற்கு தெரியவந்துள்ளமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளுது.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான 32 வயதுடைய ஹேராதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.