யாழ் நகரில் சிக்கிய வாள்வெட்டு கும்பல்! 19 வயது இளைஞன் உட்பட பலர் கைது

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் நகருக்கு அண்மையாக அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 வயதான இளைஞன், வண்ணார் பண்ணையை சேர்ந்த 19 வயதான இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டிக்குள் இருந்து வாள், இரும்பு கம்பி, இரும்பு குழாய் என்பன மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.