பிரான்ஸில் தமிழர்கள் வாழும் பகுதியில் புதிய தடை


பிரான்ஸில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால், சென்ரெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்கலன்களில் எரிபொருட்களை விநியோகிக்க செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கலன்களில் எரிபொருள் வாங்கவோ / விற்பனை செய்யவோ தடை செய்யப்படுவதாக சென்ரெனிஸ் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

பிரான்ஸ் மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருட்களை கொள்வனவு செய்வதாக தெரிவிக்கப்பட்டு இந்தத் தடை கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

முன்னதாக இதே கட்டுப்பாடு பா-து-கலே மாவட்டத்திலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்ரெனிஸ் மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாட்டால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் பதற்றம் சென்ரெனிஸ் மாவட்டத்திலும் உணரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.