இலங்கையர்களுக்கு இலவசமாக கிடைக்கவுள்ள மண்ணெண்ணெய்


சீனாவினால் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது.

அண்மையில் சீன அரசினால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் கடற்றொழிலாளர்களுக்கு விநியோகிக்கும் வைபவம் நாளை (23) காலை 8.00 மணிக்கு பாணந்துறை கடற்றொழில் துறைமுகத்தில், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் வீ ஷென் ஹொன் ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மண்ணெண்ணெயில் இயங்கும் 26,000 மீன்பிடிப் படகுகளுக்கு தலா 150 லீற்றர் வீதம் இதன்போது விநியோகப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.