கொரோனா பரவலுக்கு மத்தியிலும் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர்!

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் 2019 முதல் 2021 வரை 825000 வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.உள்துறை இணை அமைச்சர் நித்தியானத் ராய் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.அத்துடன் 26599 பேர் விசாவுக்கான காலக்கெடு முடிந்தும் இந்தியாவில் தங்கி இருந்ததாகவும் அப்படி இருந்தவர்கள் குறித்து உண்மைத்தன்மை அறிந்து விசா நீட்டிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.