முல்லைத்தீவில் வெள்ள அபாய எச்சரிக்கை : தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மக்களை அவதானமாக இருக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்ற அடிப்படையில் தண்ணிமுறிப்பு குளத்தின் ரேடியல் கதவுகள் 6” இருந்து 9” அளவில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டடில்  நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினாலே குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள விவசாயிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.