வடக்கு அயர்லாந்தில் ஐந்து கொரோனா தொற்று மரணங்கள் பதிவு!

வடக்கு அயர்லாந்தில் நேற்று சனிக்கிழமையன்று ஐந்து கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது.இதனை அடுத்து அங்கு பதிவாகிய மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 3,067 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை மேலும் 3,476 பேருக்கு தொற்று உறுதியானதாகவும், இது வெள்ளிக்கிழமை பதிவான 3,568 நோயாளிகளைவிட குறைவான எண்ணிக்கை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.