யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் முரல் மீன் குத்தி மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
குருநகர் 5 மாடி கட்டிடப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய மைக்கேல் கொலின் டினோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.