இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் உயிரிழப்பு

இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

22 வயதான குறித்த இளைஞர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து கேரளாவின் – திருச்சூர் பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது நோய் அறிகுறிகள் தென்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கேரள சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.