கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நபர் ஒருவர் கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரிகள் குழு அந்த நபரை கைது செய்ய குறித்த பகுதிக்கு சென்றுள்ளது.
இதன்போது, குறித்த நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் உடனடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபரின் முழங்காலுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக சீதுவை விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இதேநேரம் வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல் வார்ட் அருகே வழிந்தோடும் கழிவுநீர் வடிகாண் அருகில் சேர்ந்திருந்த மண்ணை அகற்ற முனைந்தபோதே அதற்குள் இருந்து குறித்த கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கைத்துப்பாக்கி 0.38 ரக கைத்துப்பாக்கி என்றும், பல வருடங்களாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
சிறைச்சாலை நிர்வாகம் வழங்கிய தகவலின் பேரில் பொரளை பொலிசார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து கைத்துப்பாக்கியை மீட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.